2020 முதல் இது வரையில் 500 அமலாக்க அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 14-

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இது வரையில், அமலாக்க நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 500 அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாக, சட்டம் மற்றும் கழகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில், அமலாக்க நிறுவனங்களின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 8,067 புகார்களை, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) பெற்றிருப்பதாகவும் அவற்றில் 4,972 புகார்கள் லஞ்ச ஊழல் தொடர்புடையவை என்றும் அஸாலினா கூறினார்.

இவற்றில், 1,192 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் பலனாக 485 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் வேளையில், 238 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று. பெரிக்காத்தான் நேஷனலின் பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர் நூரூல் அமின் ஹமிட் கேட்டிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலில் அவர் குறிப்பிட்டார்.

லஞ்ச ஊழலுடன் தொடர்பில்லாத எஞ்சிய 3,780 புகார்களுக்கு எதிராக, உளவுத் துறை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அஸாலினா. இதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கமாக கூறவில்லை.இதனிடையே, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் எம்ஏசிசியினால் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடத்தல் சம்பவங்கள் தொடர்பில். 104 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் அஸாலினா தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *