சோளம் விற்பனையில் இனவெறியா? KEL/NG என இழிவுப்படுத்தியவர் மீது நடவடிக்கை! அமைச்சர் உறுதி!

- Sangeetha K Loganathan
- 16 Feb, 2025
பிப்ரவரி 16,
மலேசிய இந்தியர்களை இழிவுப்படுத்தும் வகையிலானச் சொல்லாடல்களைப் பயன்படுத்திய வணிகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.
சாலையோரத்தில் சோளம் விற்கும் நபர் இந்தியர்களை இழிவுப்படுத்தும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி அவர்களுக்குச் சோளம் விற்படாது என எழுதி வைத்திருக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து இது போன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இது மாதிரியான இழிவானச் செயல்களைப் புரிபவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.
இது போன்ற இனவெறியர்களுக்குத் தகுந்த பாடமாக இருக்கும் வகையில் சம்மந்தப்பட்ட வணிகர் மீது நடவடிக்கை எடுப்பதை அமைச்சு உறுதி செய்யும் என்றும் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார். இதுமாதிரியான இனவெறி செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் காணொலியாகப் பதிவிட்ட பெண்மணியையும் தாம் பாராட்டுவதாகவும் தகுந்த சமயத்தில் நெறிமுறையுடன் அவர் செயலாற்றி உள்ளதாகவும் ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்துள்ளார்.
Seorang peniaga yang menggunakan kata-kata berunsur penghinaan terhadap masyarakat India dalam jualan jagungnya akan dikenakan tindakan tegas. Menteri Perpaduan Datuk Aaron Ago Dagang menegaskan tindakan ini bagi mencegah insiden serupa. Beliau turut memuji individu yang mendedahkan kejadian itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *