மசீசவின் முன்னாள் தலைவர் மீது குற்றம் சுமத்திய சிங்கப்பூர் வழக்கறிஞர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 20-

சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் முன்னாள் அரசாங்க வழக்குரைஞருமான கிளென் நைட் நேற்று காலையில் காலமானார். அவருக்கு வயது 80ஆகும்.கடந்த 1984ஆம் ஆண்டில் சிங்கப்பூர் போலீஸ்துறையில் வர்த்தக விவகாரப் பிரிவை உருவாக்கியவரான கிளென் நைட், ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில்,விமானத்திலேயே மரணமடைந்தார் என்று சிங்கையின் ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்தது.

லெக்ட்ரிக் இண்டஸ்ட்ரிஸ் பங்குகளை கையாடியது மற்றும் நம்பிக்கை மோசடி மசீசவின் ஐந்தாவது தலைவர் டான் கூன் சுவான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். அவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக செயல்பட்டவர் கிளென் நைட் ஆவார்.

அவ்வழக்கில் டானுக்கு 1986ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மசீச தலைவர் பதவியிலிருந்தும் கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விலகினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *