சிகாமட் மருத்துவமனையின் அவசரநிலை பிரிவின் புதிய கட்டடத்திற்கு லிங் டியான் சுன் வருகை!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

சிகாமாட், டிச. 18-

ஜொகூர் மாநில சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் டியான் சுன், சிகாமட் மருத்துவமனையின் அவசரநிலை பிரிவின் புதிய கட்டடத்திற்கு திடீர் வருகை புரிந்தார். இந்த பிரிவு மாநிலத்திலேயே மிகவும் வசதியான மற்றும் சிறந்த அவசரநிலை பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்றார்.

ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால் மருத்துவர்களும் செவிலியர்களும் அதிக வேலைச்சுமையைச் சமாளிக்க வேண்டியுள்ளதால், இப்பிரிவு முழுமையாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்

இந்த பிரிவின் பொறுப்பில் உள்ள மருத்துவர், தினமும் சுமார் 250 நோயாளிகள் இங்கு வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர், அதில் 70 சதவீதம் நோயாளிகள் 'கிரீன் ஜோன்' பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த அவசரநிலை பிரிவு 24 மணி நேரமும் மூன்று முறை மாற்றப்பட்ட பணி நேரத்துடன் செயல்படுகிறது. ஒவ்வொரு பணிமுறையும் ஆறு மருத்துவர்களால் நடத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டார்.

ஜொகூர் மாநில அரசு மருத்துவமனைகளின் அவசரநிலை பிரிவின் சேவைகளை மிக முக்கியமாக கருதுகிறது. எனவே, 2025-ஆம் ஆண்டு மாநில பட்ஜெட்டில், மாநிலத்தின் 12 அரசு மருத்துவமனைகளின் அவசரநிலை பிரிவை மேம்படுத்துவதற்காக வெ.1.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக லிங் டியான் சுன் தெரிவித்தார்.

"இந்த நிதி உதவியால் அவசரநிலை பிரிவின் நிலைமையை மேம்படுத்தவும். நோயாளிகள் எதிர்பார்க்கும் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் முடியும் என்று நம்புகிறேன், என்று அவர் கூறினார். அத்துடன், இந்த திடீர் ஆய்வின் போது அவருடன் இருந்த அனுவார், பெமானிஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிற உள்ளூர் தலைவர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *