குறைந்தபட்ச ஊதியம் RM 1700 நாளை முதல் அமல்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜன 31: நாடு முழுவதும் நாளை அமலுக்கு வரும் RM1,700 குறைந்தபட்ச ஊதியத்தால் சுமார் 43 லட்சத்து 70 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய குறைந்தபட்ச ஊதியம், நாட்டின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையில், தெரிவித்துள்ளது.

வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் பயிற்சியாளர்களைத் தவிர, மலேசியாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் RM1,700 குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய ஊதியத் திட்டத்திற்கு இணங்கத் தவறும் முதலாளிகள் RM1,000 முதல் RM20,000 வரையிலான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அமைச்சு எச்சரித்தது.

குறைந்தபட்ச ஊதியத்தை தொடக்க சம்பளத்திற்கான அளவுகோலாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், குறிப்பாக பட்டதாரிகளுக்கு அவர்களின் திறன்களின் அடிப்படையில் நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.

கடந்த அக்டோபரில் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ​​பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு RM1,500 இலிருந்து RM1,700 ஆக உயர்த்த அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *