AI திட்டத்தில் இலக்கவியல் அமைச்சு தீவிரம்! - கோபிந்த் சிங்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 4 – செயற்கை நுண்ணறிவு துறையில் தொடர்ந்து வழிகாட்டும் வகையில் பல முக்கிய திட்டங்களை இலக்கவியல் அமைச்சு முன்னெடுத்துள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சிகள் தொடர்பான துறையினருடன் கலந்துரையாடல், பிற துறையைச் சார்ந்தவர்களோடு ஒத்துழைப்பு என இலக்கவியல் அமைச்சு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்பாக வேலையிடத்தில் செயற்கை நுண்ணறிவு எனும் கருப்பொருளில் அரசு ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு திறன்பயிற்சிகளை வழங்கும் திட்டத்தில் தமது அமைச்சு மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக வர் கூறினார்.

 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ‘மலேசியாவின் எதிர்காலத்துக்கு செயற்கை நுண்ணறிவு’ எனும் திட்டத்தை Microsoft நிறுவனத்துடன் இணைந்து இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்தது. மொத்தம் 800,000 உள்நாட்டுப் பணியாளர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Kementerian Digital sedang melaksanakan pelbagai inisiatif utama dalam bidang kecerdasan buatan (AI), kata Menteri Digital, Gobind Singh Deo. Ini termasuk latihan AI untuk penjawat awam dan kerjasama dengan sektor lain. Disember lalu, kementerian bekerjasama dengan Microsoft untuk melatih 800,000 tenaga kerja tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *