எல்லை தாண்டிய குற்றங்களில் உள்துறை அமைச்சு கவனம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா: 2025 ஆம் ஆண்டு மலேசியா ஆசியான் மாநாட்டிற்குத் தலைமை ஏற்பதை அடுத்து, ​​எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்களைக் கண்காணித்துத் தடுப்பது உள்துறை அமைச்சின்ன் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

10 முக்கிய நிகழ்ச்சி நிரல்களை உள்ளடக்கிய பாதுகாப்புத் தொகுப்பில் அமைச்சு ஈடுபடும் என்றும், இது அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சு மட்டங்களில் உள்ள அனைத்து கூட்டங்களுக்கும் வழிகாட்டியாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.

எல்லை தாண்டிய குற்றம் தொடர்பாக தங்களின் முழு கவனம் இருக்கும் என்றும், இதில் புலனாய்வுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *