மலேசியாவில் பாலஸ்தீனிய அகதிகள் போராட்டம்!

top-news

ஜனவரி 5,

பாலஸ்தீனப் போரில் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு மலேசியாவில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பானக் காணொலிகள் சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து Wisma Transit கோலாலம்பூரில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தேசிய ராணுவ அமைப்பான Angkatan Tentera Malaysia தெரிவித்துள்ளது. 

சிறுவர்களும் பெரியவர்களும் பொருள்களை உடைத்து தடுப்புச் சுவர்களைச் சேதப்படுத்தும்படியானக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. மலேசியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளையும் அவர்கள் சேதப்படுத்திய நிலையில் அவர்களை ராணுவ அதிகாரிகள் கட்டுப்படுத்தியதாகவும் போராட்டத்திற்கானக் காரணத்தையும் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Warga Palestin yang ditempatkan di Malaysia terlibat dalam protes di Wisma Transit, Kuala Lumpur. Mereka merosakkan harta benda dan tembok. Tentera Malaysia mengawal situasi dan sedang menyiasat punca protes tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *