உணவகத்தில் பாராங்கத்தியுடன் வன்முறை வெறியாட்டம்! - 29 வயது நபர் கைது

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஜன 3: இன்று காலை 9.11 சண்டகான் பத்து தீகாவில் உள்ள ஓர் உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயது நபர் பராங்கத்தி மற்றும் சுத்தியல் ஆயுதங்களுடன் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டார். இதில்  ஐந்து பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக ஒரு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து போலீஸார் அங்கு விரைந்ததாக சண்டகான் மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் அப்துல் ஃபுவாட் அப்துல் மாலேக் தெரிவித்தார்.

இதனை அடுத்து போலீஸ் அதிகாரிகள் 29 வயதான உள்ளூர் சந்தேக நபரைப் பிடித்து அடக்கியதாக அவர் மேற்கோள் காட்டினார்.

தாக்குதல் நடந்தபோது உணவகத்திற்குள் இருந்த  இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் பாதிப்புக்குள்ளாகினர்.

சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும், இது தொடர்பான எந்த தகவலையும் போலீஸாரிடம் பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *