குவைத் விமான நிலைய சேதத்திற்கு ஈரான் மறுப்பு: ‘பேட்ரியட்’ ஏவுகணை கோளாறே காரணம் என விளக்கம்

top-news
FREE WEBSITE AD

தெஹ்ரான், ஜூன் 4 –

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) திட்டவட்டமாக மறுத்துள்ளது. விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் ஏற்பட்ட சேதம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ‘பேட்ரியட்’ ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் நிகழ்ந்ததாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

குவைத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் சேதம் ஏற்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) குற்றம்சாட்டிய நிலையில், அதனை ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் கூற்றுப்படி, தாக்குதலை தடுக்க ஏவப்பட்ட ‘பேட்ரியட்’ ஏவுகணைகளில் ஒன்று செயலிழந்து விமான நிலைய வளாகத்தில் விழுந்ததே சேதத்திற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்கா இந்த விளக்கத்தை நிராகரித்துள்ளது. குவைத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட மற்றும் நியாயமற்ற டிரோன் தாக்குதல் என்றும், அதற்கு ஈரானே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் CENTCOM தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *