ஏர்ஆசியா விமானத்தை பறவைகள் மோதின!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 10-

சபாவின் தாவாவ் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட ஏர்ஆசியா விமானம் ஒன்றைப் பறவைக் கூட்டம் மோதியது. மோதலில் விமானத்தின் இயந்திரம் பாதிக்கப்பட்டதால் சிறிது நேரத்தில் அது தாவாவ் அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது.சனிக்கிழமையன்று அச்சம்பவம் நடைபெற்றது.

பறவைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு இலக்கான ஏகே5741 எனும் பயண எண்கொண்ட விமானத்தின் இயந்திரங்களில் ஒன்று சேதமுற்றது. அது பற்றிய சமிக்ஞை கிடைத்தவுடன் அந்த விமானம் தாவாவ் விமான நிலையத்திற்கே மீண்டும் திரும்பி வந்து தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 177 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக கீழே இறங்கினர் என்று ஏர்ஆசியா நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது.

அதன் பிறகு, பொறியியல் ரீதியில் அந்த விமானம் முழுமையாகச் சோதனையிடப்பட்டது. தேவையான பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வழக்கமான பயண நடவடிக்கையில் அது ஈடுபடுத்தப்பட்டது என்று அந்நிறுவனம் கூறியது. இந்த காலகட்டத்தில் விமானப் பயணிகள் நன்கு கவனிக்கப்பட்டனர். அன்றைய தினம் இரவே இரவு 9.58 மணியளவில் மற்றொரு விமானம் மூலம் அவர்கள் தாவாவுக்குப் புறப்பட்டனர் என்று அந்த அறிக்கை கூறியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *