ஜொகூர் டத்தோ பென்டாராவில் அதிகாலை 2.40 மணியளவில் தீ விபத்து!

- Muthu Kumar
- 17 Jan, 2025
ஜொகூர் பாரு, ஜன 17:
இன்று அதிகாலை ஜொகூர், உலு திராம், ஜாலான் லிமாவ் மனிஸ், கம்போங் டத்தோ பென்டாராவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தாய், அவரது மகன் மற்றும் அவரது பேத்தி ஆகிய மூன்று பேர் பலியாகினர்.
அதிகாலை 2.40 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் 63 வயதான இங் ஜியோக் சூ, 30 வயதான லீ சிவ் யோங் மற்றும் 11 வயதான சென் சி ஜிங் என அடையாளம் காணப்பட்டதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.
12 வயது சென் யூ ரோங் என்ற சிறுவன் உயிர் பிழைத்து இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் (HSI) சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *