ஓடியன் திரையரங்கு கட்டிடத்தில் தீ! பினாங்கில் பரபரப்பு

top-news
FREE WEBSITE AD

பினாங்கு, மே 30: நூற்றாண்டுகள் பழமையான ஓடியன் திரையரங்கில் தீ பற்றியது. இதனால் அவ்விடத்தில் பரபரப்பு மூண்டது. தீ திரையரங்கின் பாதிப் பகுதியை அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டிருந்த இந்த இரண்டு மாடிக் கட்டிடம் மக்களின் மகிழ்விடமாகத் திகழ்ந்தது.

இரவு 8.50 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஜார்ஜ் டவுனில் உள்ள அப்பர் பினாங்கு சாலையில் உள்ள சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் 10 நிமிடங்கள் கழித்து வந்தடைந்ததாகவும் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவ தொடர்பாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட ஓடியன், 1940கள் முதல் 1960கள் வரை ஹாலிவுட் கிளாசிக் மற்றும் மலாய் திரைப்படங்களைத் திரையிட்டது. இது 1999-2001 வாக்கில் மூடப்பட்டு, சில ஆண்டுகள் காலியாக இருந்தது. பின்னர் முக்கியமாகத் தமிழ் திரைப்படங்களைத் திரையிடுவதற்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன் இறுதித் திரையிடல் ஜூலை 2014 இல் நடந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்தக் கட்டிடம் ஒரு ஊடாடும் அருங்காட்சியகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் இரவு விடுதியாக மாற்றப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *