ஜெலுத்தோங் பாராட் பகுதியில் இரும்பு வேலைப்பாடு நிலையத்தில் தீ! 80% நாசம்

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், பிப் 10: ஜெலுத்தோங், கம்போங் ஜெலுத்தோங்  பாராட் பகுதியில் உள்ள ஒரு இரும்பு வேலைப்பாடு நிலையம், அதன் உரிமையாளர் உணவு வாங்க வெளியே சென்றிருந்த வேளையில் தீ விபத்து ஏற்பட்டதில் கடுமையாக சேதமடைந்தது.

காலை 10.28 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து தீயணைப்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைத் தலைவர் ஆ’அசெலான் ஹசான் தெரிவித்தார்.

தீயணைப்பாளர்கள் 30 நிமிடத்திற்குள் தீயைக் கட்டுப்படுத்தினாலும், அந்த வேலைப்பாடு நிலையம் சுமார் 80 சதவீதம் சேதமடைந்ததாக ஆ’அசெலான் தெரிவித்தார்.

இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் மற்றும் மொத்த சேத மதிப்பு குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *