RM 10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் – போதைப்பொருள்கள் பறிமுதல்!

- Shan Siva
- 22 Jan, 2025
டெங்கில், ஜன 22: சிலாங்கூரில் நான்கு இடங்களில் சுமார் 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் போதைப்பொருட்களை அரச மலேசிய சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக சுங்கத்துறை உதவி இயக்குநர் ரைசாம் செட்டாபா முஸ்தபா தெரிவித்தார்.
இதனை அடுத்து விசாரணைக்கு
உதவுவதற்காக 50 வயதுடைய ஒரு உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக, ஜனவரி 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள
இரண்டு தளவாட நிறுவன கிடங்குகளில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் சுமார் ஒரு கிலோ எடையுள்ள
இரண்டு கோகோயின் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரைசாம் கூறினார். இவற்றின் மதிப்பு
4 லட்சத்து 20 ஆயிரம் என அவர் கூறினார்.
இரண்டு
வழக்குகளும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39(B)(1)(a) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதைத் தவிர்த்து டிசம்பர் 30 அன்று, கோலாலம்பூர்
சர்வதேச விமான நிலையத்தில் (KLIA), மெயில் மற்றும் கூரியர் மையத்தில் ஒரு
பொட்டலத்தை தனது குழு கைப்பற்றியதாக ரைசம் மேலும் கூறினார்.
ஒரு பொம்மை என்று
அறிவிக்கப்பட்டு தோராயமாக 1.3 கிலோ எடையுள்ள அந்தப் பொட்டலம், RM4,000 வெள்ளி மதிப்புடையது மற்றும் ஒரு
ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பப்பட்டது என்று விளக்கினார்.
பொட்டலத்தில்
திரவத்தால் நிரப்பப்பட்ட மின்னணு சிகரெட்டுகளுக்கான 100 கண்ணாடி தோட்டாக்கள்
மற்றும் துண்டாக்கப்பட்ட பச்சை தாவரப் பொருட்களைக் கொண்ட ஐந்து காகித ரோல்கள்
இருந்தன. இரண்டும் கஞ்சாவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக
அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *