13 வீடுகளில் தீ!

- Shan Siva
- 05 Jan, 2025
சுங்கை பெட்டாணி: பெடோங்கில் உள்ள கம்போங் கெடா தஞ்சோங் தாவாயில் இன்று 13 வீடுகளில் தீப்பிடித்ததில் ஒரு நபருக்கு கால்கள் மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது.
தங்களுக்கு காலை
7.28 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், முதல் தீயணைப்பு
இயந்திரம் காலை 7.53 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கெடா தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறையின் மூத்த கண்காணிப்பாளர் அசார் முகமட் கூறினார்.
யான் தீயணைப்பு
மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து மொத்தம் 25 தீயணைப்பு வீரர்கள்
ஈடுபடுத்தப்பட்டனர். குவார் செம்பெடாக், சுங்கை பெட்டாணி மற்றும்
அருகிலுள்ள தன்னார்வ தீயணைப்புப் படைகளின் சக ஊழியர்கள் அவர்களுக்கு உதவினார்கள்.
காலை 8.12
மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *