வெடித்துக் கிளம்பிய தீ! - கிள்ளான் ரசாயனத் தொழிற்சாலை சேதம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 20: கிள்ளான், சுங்கை காப்பார் இண்டாவில் உள்ள தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பலத்த வெடிச்சத்தம் கேட்டது..

மாலை 4.45 மணிக்கு தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் வெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் கூறினார்.

இதனால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை கட்டிடம் சேதமடைந்ததோடு, அருகில் உள்ள தொழிற்சாலைகளும் சேதமடைந்தன என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார், காயங்கள் அல்லது இறப்புச்சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும்  அவர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அபாயகர மற்றும் நச்சுப் பொருட்கள்  முறியடிப்புக் குழு, தீப்பிடித்த பொருள் மறுசுழற்சி செய்யப்பட்ட அமிலம் என்பதைக் கண்டறிந்தது.

வெடிப்பு மற்றும் தீ விபத்தில் ஒரு டேங்கர் லாரி அழிக்கப்பட்டதாக  அந்தத் துறை தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *