மழையினால் ரத்தான விமானப் பயண முழு கட்டணம் திரும்ப செலுத்தப்படும் - ஏர் ஆசியா!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், டிச. 4-

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மழைக்காலம் பல மாநிலங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும்.இதனால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், நிபந்தனை மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ரத்து செய்யப்பட்ட விமானப் பயணங்களுக்கான முழு கட்டணத்தையும் திரும்ப செலுத்துவது போன்ற சேவை மீட்புத் தேர்வு, எஸ்.ஆர்.ஓவை ஏர் ஆசியா ஏவியேஷன் குழுமம் வழங்குவதாக அதன் விமான நடவடிக்கைப் பிரிவு துணை தலைமை செயல்முறை அதிகாரிடத்தோ கேப்டன் செஸ்டர் வூ தெரிவித்தார்.

மேலும், பயணிகள் புறப்படும் தேதிக்கு 14 நாள்களுக்குள் ஒரு முறை மட்டும் பயணத்திற்கான தேதியை மாற்றவோ அல்லது அடுத்த விமான பயணத்திற்கு ஏர் ஆசியா கணக்கில் முன்பதிவு மதிப்பை சேமிக்கவோ அந்த விமான நிறுவனம் வாய்ப்பு வழங்குவதாக அவர் கூறினார். "எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு பயணத்தை மேற்கொள்ளவோ அல்லது கூடுதல் பயணம் செய்யவோ பாதுகாப்பு முறை ஒன்றுதான்.

எனவே, பொது விமான அமலாக்கத் தரப்பு நிர்ணயித்த செயல்பாட்டு தரநிலையைபின்பற்றுங்கள்," என்றார் அவர். நேற்று, சிப்பாங், ஏர் ஆசியா ரெட்கியூவில் சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏர் ஆசியா விமான கட்டணத்தை நிர்ணயிக்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *