முதல் அலை வெள்ள பாதிப்பு பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன-ஃபட்லினா!

- Muthu Kumar
- 09 Dec, 2024
பட்டர்வொர்த், டிச. 9 -
அண்மையில் ஒன்பது மாநிலங்களில் ஏற்பட்டிருந்த "முதல் அலை” வெள்ளத்தில் பாதிப்படைந்திருக்கும் பள்ளிகளைக் கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.சம்பந்தப்பட்ட அப்பள்ளிகளில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை மதிப்பிடும் பணியில் கல்வி அமைச்சு தற்போது ஈடுபட்டிருப்பதாக, அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
“இந்த “முதலாவது அலை” வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் தொடர்பிலான தகவல்கள் எங்களிடம் உள்ளன. சேதங்கள் கணிப்புகள் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது. அடுத்து ஏற்படக் கூடும் என்று நம்பப்படும் வெள்ளத்தை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகி வருகிறோம். இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தயார் நிலையில் நான் திருப்தி அடைகின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, “இரண்டாம் அலை" வெள்ளத்தால் பல மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், அக்காலகட்டத்தில் நடைபெறும் எஸ்பிஎம் மாணவர்களுக்கான அறிவியல் தேர்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, கல்வி அமைச்சு ஓப்ஸ் பாயுங் உட்பட பல தயார்நிலை முன்னேற்பாடுகளை செய்திருப்பதாகவும் ஃபட்லினா தெரிவித்துள்ளார்
“இரண்டாம் அலை வெள்ளத்தால் கிளந்தான், திரெங்கானு, பகாங், பெர்லிஸ், கெடா, பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று, மலேசிய வானிலை ஆய்வு இலாகா (மெட்மலேசியா) தொடர்ந்து எச்சரிக்கையை விடுத்து வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *