சிலாங்கூர் பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்துப் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார் ரீஷா குமரேசன்!

- Muthu Kumar
- 23 Jun, 2025
ஷா ஆலம், ஜூன் 23-
சிலாங்கூர் பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் சைபர் ஜெயா இடைநிலைப்பள்ளி மாணவி ரீஷா குமரேசன் வெற்றி வாகை சூடினார். பள்ளிப் பாட நேரம் முடிந்ததும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் இவர் முதல் நிலை வெற்றியாளராக வாகை
சூடியுள்ளார்.
பயிற்றுநர் ஜோதீஸ்வரன் ஆலோசனையில் பயிற்சிகளை முறையாக மேற்கொண்டு வருவதால் சிலாங்கூர் பள்ளிகளுக்கான பூப்பந்து போட்டியில் சாம்பியனாக வாகை சூடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் இவர் முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடியுள்ளார். சிலாங்கூர் பள்ளி விளையாட்டு மன்றத்தின் 18 வயதுக்குட்பட்ட மலேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு மன்றப் போட்டியில் பங்கேற்று சாம்பியனாக வெற்றி பெற்றார்.
பல்வேறுபட்ட போட்டிகளில் பங்கேற்று பல சாதனை விருதுகளை வென்றுள்ளார். எஸ்பிஎம் தேர்வில் 9ஏ பெற்று பள்ளிக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எதிர்காலத்தில் பூப்பந்து விளையாட்டில் தனது அக்கா ரீஷா குமரேசன் போல் இளம் பூப்பந்து விளையாட்டாளர் ஷர்விதா குமரேசன் உருவாவதற்கு எண்ணம் கொண்டுள்ளார் என அவர் கூறினார்.
Risha Kumaresan dari SMK Cyberjaya menjuarai acara perseorangan bawah 18 tahun bola jaring antara sekolah Selangor. Beliau aktif berlatih di bawah jurulatih Jotheeswaran, cemerlang dalam akademik dengan 9A SPM, dan menjadi inspirasi adiknya, Sharvitha.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *