லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

top-news
FREE WEBSITE AD

பெய்ரூட், மே 23-

லெபனானின் தெற்கு பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மருத்துவ உதவி பணியாளர்கள் மற்றும் ஒரு சிறுவனும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் Hanouiyeh மற்றும் Deir Qanoun al Nahr பகுதிகளில் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Hanouiyeh பகுதியில் ஹெஸ்பொல்லாவுடன் தொடர்புடைய Islamic Health Association அமைப்பை சேர்ந்த 4 மருத்துவ உதவி பணியாளர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Deir Qanoun al Nahr பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் Amal இயக்கத்துடன் தொடர்புடைய மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஒரு சிறுவனும் பலியானதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஹெஸ்பொல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகள் மற்றும் ஆயுத தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *