“விஜய்யை அதற்குள் விமர்சிப்பது சரியாக இருக்காது” - மத்திய மந்திரி சுரேஷ் கோபி கருத்து
- Surendran Sumdraraj
- 27 May, 2026
சென்னை, மே 27-
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகர் Vijay-யை தற்போது விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று மத்திய மந்திரியும் நடிகருமான Suresh Gopi தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, “விஜய் தற்போது தனது பணிகளை மேற்கொள்ளட்டும். செயல்பாட்டின் மூலம் தன்னை நிரூபிக்க அவருக்கு கொஞ்சம் அவகாசம் வழங்க வேண்டும். அதற்கு முன்பே விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல” என்று கூறினார்.
மேலும், “மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். அந்த வாய்ப்பை அவர் நல்லாட்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்” என்றும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



