ஒரு மாதத்தில் 78,152 பேருக்குச் சம்மன்கள்! – JPJ

- Sangeetha K Loganathan
- 30 Nov, 2024
நவம்பர் 30,
நாடு முழுவதும் போக்குவரத்துக் குற்றப் புலனாய்வு ஆணையமான JPJ நடத்திய சோதனையில் 78,152 பேருக்குச் சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் துணை இயக்குநர் Datuk Jazmanie Shafawi தெரிவித்தார். சாலை விதிகளை மீறியதற்காக மோட்டார் சைக்கிள்களைச் சோதனை நடத்தியதாகவும் ஓடுநர் உரிமம் இல்லாத 22,601 பேருக்குச் சம்மன்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள்களுக்குக் காப்பீடு இல்லாதது, பதிவு எண்கள் மாற்றப்பட்டிருப்பது, காலாவதியான ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல், 16 வயதுக்குட்பட்டவர்கள் என பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 78,152 பேருக்குச் சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக Datuk Jazmanie Shafawi தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய 234 மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் 34 போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதாகவும் இந்த மோட்டார் சைக்கிள் சோதனையில் 2,125 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
JPJ mengeluarkan 78,152 notis kesalahan dalam Operasi Khas Motosikal sejak 1 November, termasuk tiada lesen memandu (22,601 notis) dan tiada insurans (15,117). Sebanyak 2,125 motosikal disita, dan 34 penunggang positif dadah daripada 234 diuji.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *