16 வயது சிறுவனைப் பாலியல் தொந்தரவு செய்த 37 வயது பயிற்சியாளர் கைது!

top-news

பிப்ரவரி 12,


16 வயது சிறுவனைப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கைது செய்யப்பட்ட 37 வயது பூப்பந்து பயிற்றுநர் தமக்கு மனநலக் குறைபாடு இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னதாக ஜனவரி 20 ஆம் நாள் ஈப்போவில் உள்ள Taman Seri Rapat வீட்டில் பூப்பந்து பயிற்சிக்காக வந்த 16 வயது சிறுவனுக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவருக்கு மீண்டும் மனநலன் பாதிப்பிற்கானப் பரிசோதனையை மேற்கொள்ளும்படி ஈப்போ Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் கைது செய்யப்பட்டவருக்கான ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் மனநலன் பரிசோதனைக்குப் பின் மேலதிக விசாரணையைத் தொடரும்படியும் அதன்பின்னர் ஜாமின் மனுவை மறு ஆய்வு செய்வதாகவும் நீதிபதி Jean Sharmila Jesudason உத்தரவிட்டார்.

Jurulatih badminton yang tertuduh untuk kes amang seksual telah mengaku bahawa dia mempunyai masalah mental dan mahkamah mengarah untuk pemeriksaan tahap kesihatan mental. Permohonan jamin ditanggung dan siasatan lanjut akan dilaksanakan selepas pemeriksaan kesihatan mental.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *