கால்வாயில் விழுந்த 9 வயது சிறுவன்! ஆற்றில் சடலமாக மீட்பு!

- Sangeetha K Loganathan
- 29 Jan, 2025
ஜனவரி 29,
கடந்த திங்கட் கிழமை KOTA TINGGI பகுதியில் உள்ள ஆற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார். கடந்த 2 நாள்களாகச் சுமார் 44 அதிகாரிகள் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் இன்று காலை மரக்கிளைகளுக்கிடையில் சிக்கியிருந்த 9 வயது Mohammad Rayyan Alif Mohd Sharif எனும் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கடந்த திங்கள் Taman Kota Jaya பகுதியில் உள்ள கால்வாயில் தனது செருப்பை எடுப்பதற்காக உள்ளே இறங்கிய போது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட சிறுவனின் உடல் கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.
Seorang kanak-kanak berusia 9 tahun ditemukan mati lemas di sungai Kota Tinggi selepas terjatuh ke dalam saluran air ketika cuba mengambil selipar. Operasi mencari dilakukan oleh 44 pegawai selama dua hari sebelum mayatnya dijumpai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *