வெள்ளத்தில் 1 வயது குழந்தை பலி!

top-news

நவம்பர் 30,

கிளாந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலரும் வீடுகளை இழந்துள்ள நிலையில் TUMPAT பகுதியில் உள்ள வீட்டில் வெள்ளம் சூழ்ந்ததில் 1 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கிளாந்தான் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார். 

மாலையில் சம்மந்தப்பட்ட வீட்டில் உள்ளவர்களை வெளியேறும்படி தெரிவித்தும் வீட்டின் இரண்டாவது மாடியில் பத்திரமாக இருப்பதாகக் குடும்பத்தார் தெரிவித்ததாகவும், சம்மந்தப்பட்ட வீட்டில் கணவன் மனைவி மட்டுமே இருப்பதாகத் தெரிவித்ததால், நிவாரணப் பொருள்களை மட்டும் வழங்கியதாகவும் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.

இரவு 11.30 மணியளவில் 1 வயது மகனைக் காணாமல் தேடிய தாயார் வீட்டின் தரையில் மிதப்பதைக் கண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் ஆனால் குழந்தை இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாக Datuk Mohd Yusoff Mamat விளக்கமளித்தார்.
வெள்ளக் காலத்தின் போது, மீட்புப் படையினர்களுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் உயிரிழப்புகளைத் தடுக்கலாம் என Datuk Mohd Yusoff Mamat எச்சரிக்கை விடுத்தார்


Seorang kanak-kanak lelaki berusia setahun lemas selepas terjatuh dalam air di rumah banjir di Tumpat. Ini korban ketiga banjir Kelantan, dengan ramalan hujan reda tetapi air ke hilir masih berisiko.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *