சிவராத்திரி இரவில் கண்விழிக்க வேண்டும் என சொல்லுவதன் ஆன்மிக ரகசியம் என்ன தெரியுமா?
- Tamil Malar (Reporter)
- 15 Feb, 2026
பூமியின் காந்தவியல் தன்மை அதிகரிக்கிறது. இந்த நாளில் நமது உடல் நேராக இருக்கும்படி விழித்திருப்பதால், அந்த நேர்மையான ஆற்றலை உடலுக்கு நன்மைகளை வழங்குவதாக சொல்லப்படுகிறது. சிவராத்திரியில் விழிப்பது மற்றும் தவம் செய்வது உடலுக்கு நல்லவை.
லுமினி பெரஸ் ஈதர்(Luminiferous Eather) எனப்படும் ஒரு பிரம்மாண்டமான சக்தி மகா சிவராத்திரி அன்று மின்னல் வேகத்தில் பூமியை நோக்கி இறங்கும். நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபிராமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டாகும். எனவேதான் இந்த சிவராத்திரி நாளில் தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது.
மஹாசிவராத்திரியில் விழித்திருந்து சிவனை வழிபடுவது, பக்தர்களுக்கு புண்ணியம் சேர்க்கும் ஒரு உயர்ந்த ஆன்மீக அனுபவமாகும். இந்த இரவில், நமது உடல், மனம், ஆன்மா மூன்றும் ஒருமைப்படும் இதனால் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும் என்கிறார்கள். இது தவிர வேறு என்ன காரணத்திற்காக இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும் .இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, பூஜைகள் செய்து, சிவபெருமானை வழிபடுகின்றனர். இந்நாளில் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும் என்பதும், சிவனை தியானித்து, சிவ மந்திரங்களை ஜெபிக்க வேண்டும், சிவ பூஜை செய்தும், சிவ தரிசனம் செய்தும் வழிபட வேண்டும் என்பது கண்டிப்பான ஒன்றாக பல்வேறு ஆன்மீக நூல்களில் வலியுறுத்தப்படுகிறது.
சிவபெருமானின் விஷ யாகம்:
புராணங்களின்படி, பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட "ஆலகால" விஷத்தை உண்டு, உலகத்தை காப்பாற்றியவர் சிவ பெருமான். அந்த விஷத்தின் தாக்கம் விலக, தேவர்கள், முனிவர்கள் அனைவரும் சிவனை முழு இரவும் வழிபட்டனர். இதன் அடிப்படையில், பக்தர்களும் இந்த நாளில் இரவு முழுவதும் விழித்து சிவனை போற்ற வேண்டும் என நம்பப்படுகிறது.
* மனநிலையின் உயர் பரிணாமம்:
யோகத்தின் படி, இரவு முழுவதும் விழித்திருந்து தியானம் மற்றும் வழிபாடு செய்யும்போது, ஜீவனில் ஆன்மீக சக்தி அதிகரிக்கிறது. மஹா சிவராத்திரியின் போது, பிரபஞ்ச ஆற்றல் மிகுந்திருக்கும், இதன் மூலம், விழிப்புணர்வை மேம்படுத்தி, உள்ளார்ந்த ஆற்றலை வளர்க்கலாம்.
அருள்பெற நல்ல நேரம்:
இந்து சமயத்தில், "காளராத்திரி" எனப்படும் சக்தி மிகுந்த இரவுகளில், தியானம் செய்வது பெரும் பலனை தரும் என்று கூறப்படுகிறது. மஹாசிவராத்திரி இரவும் அதே போல், பக்தர்களுக்கு புண்ணியத்தை வழங்கும் நேரமாக கருதப்படுகிறது.
உடல் நலம் மேம்படுகிறது:
சிவராத்திரியில் விழிப்பது மற்றும் தவம் செய்வது உடலுக்கு நல்லவை. இது நரம்பியல் அமைப்பை கட்டுக்குள் கொண்டு, உடலில் ஒழுங்குமுறையை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் நலன் அதிகரிக்கிறது.
மஹாசிவராத்திரியில் இரவு முழுவதும் விழிக்க வழிகள்
சிவ மந்திர ஜபம்: "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.
லிங்கம் அபிஷேகம்:
பால், தேன், பஞ்சாமிர்தம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்யலாம். சிவபுராணம், திருவாசகம் போன்றவை கேட்கலாம். இந்த இரவு முழுவதும் தியானம் செய்தால், மிகுந்த ஆனந்த அனுபவம் பெறலாம்.சிவன் அடியார்கள் பக்தி பாடல்களை பாடுவதும் சிறந்த வழிபாட்டு முறையாகும்.
மஹாசிவராத்திரியில் கண் விழிப்பதன் பலன்கள் :
சிவபெருமானின் அருள் கிடைக்கும்
* மன அழுத்தம் குறையும்
* தியானத்தின் மூலம் உயிர்ச்சக்தி அதிகரிக்கும்
* இறை சிந்தனையில் உறுதியுடன் நிலை நிறுத்தலாம்
* பாவங்கள் தீரும், புண்ணியம் சேரும்.
லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



