கூட்டரசு நீதிமன்றத்தில் தீ!

- Sangeetha K Loganathan
- 05 Dec, 2024
டிசம்பர் 5,
இன்று நண்பகல் 12.45 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றத்தில் தீ பரவியதாகத் தீயணைப்பு நிலையத்திற்குப் புகார் கிடைத்ததாக Putrajaya தீயணைப்பு ஆணையத்தின் இயக்குநர் Abdul Mamaf Che தெரிவித்தார்.
கூட்டரசு நீதிமன்றத்தில் உள்ள விவாத அறையில் தீ பிடித்ததாகவும் மற்ற இடங்களுக்குப் பரவும் முன்னர் உடனடியாகத் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தீவிபத்தில் எந்தவோர் உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார் . நண்பகல் 1 மணியளவில் கூட்டரசு நீதிமன்றம் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
Kebakaran akibat litar pintas mencetuskan kekecohan di sebuah bilik perbicaraan Mahkamah Persekutuan, Putrajaya. Tiada prosiding berlangsung, dan insiden diserahkan kepada pihak penyelenggaraan. Operasi bomba tamat pada 1.09 tengah hari.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *