தீ விபத்தில் தாயும் 4 குழந்தைகளும் உடல் கருகி பலி!

- Sangeetha K Loganathan
- 13 Feb, 2025
பிப்ரவரி 13,
இன்று அதிகாலை மலாக்கா ஜாசினில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 வயதானத் தாயும் 2 முதல் 13 வயதான 4 குழந்தைகளும் உடல் கருகி உயிரிழந்தாக ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Rusli Mat தெரிவித்தார்.
அதிகாலை 1.40 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாகவும் 12 தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். தீயினால் 80% வீடு கருகிய நிலையில் வீட்டிலிருந்த 35 வயது பெண்ணும் அவரின் 4 குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார். தீயை முழுமையாகக் கட்டுப்படுத்திய பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டதாகவும் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Rusli Mat தெரிவித்தார்.
Seorang ibu berusia 35 tahun dan empat anaknya berusia 2 hingga 13 tahun maut dalam kebakaran rumah di Jasin, Melaka. Pasukan bomba tiba di lokasi pada 1.40 pagi dan berjaya mengawal api namun mangsa ditemukan rentung.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *