6 வீடுகள் தீயில் கருகின! இருவர் காயம்!

top-news

டிசம்பர் 13,

செம்பனைத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் இருந்த தொழிலாளர்களின் வீடுகளும் தீயில் முற்றிலும் கருகியதாகவும் 2 தொழிலாளர்கள் தீ காயங்களுக்கு இலக்காகியதாக சரவாக் மாநிலத் தியணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
மாலை 6.45 மணிக்கு ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 2 தொழிலாளர்களும் இந்தோனேசியத் தொழிலாளர்கள் என்றும் தீ பரவும் முன்னரே அவர்களை மீட்டதால் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10.20 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் 6 வீடுகள் முழுவதும் தீயில் கருகியது. தீ பரவியதற்கானக் காரணத்தைத் தடயவியல் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enam rumah pekerja di ladang sawit Lundu terbakar, menyebabkan dua warga Indonesia cedera melecur. Kebakaran berlaku jam 6.45 petang, dengan operasi pemadaman melibatkan 11 anggota bomba selesai jam 10.20 malam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *