சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தால் தீ விபத்து!

- Sangeetha K Loganathan
- 29 Jan, 2025
ஜனவரி 29,
தலைநகர் CHERAS பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 2.40 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்புக் கிடைத்த நிலையில் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டிலிருந்த நால்வரை மீட்டதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
46 முதல் 81 வயதுள்ள நால்வர் வீட்டிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தீ பரவியதாகவும் வாசலில் இருந்த மோட்டார்சைக்கிள் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமாகிய நிலையில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். பட்டாசு வெடிப்புகளின் துகல்கள் வீட்டின் மொட்டை மாடியில் பரவியதால் தீ பரவியதாகவும் 20% தீயில் எரிந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Sebuah rumah di Cheras terbakar akibat percikan mercun semasa sambutan Tahun Baru Cina. Pasukan bomba menyelamatkan empat penghuni berusia 46 hingga 81 tahun tanpa kecederaan. Kebakaran bermula di bumbung rumah dan memusnahkan sebuah motosikal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *