செந்தூலில் 3 கடைகள், 40 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகின!

top-news

பிப்ரவரி 7,

இன்று அதிகாலை செந்தூலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் தீயில் கருகியதுடன் 40 மோட்டார் சைக்கிள்களும் ஒரு காரும் தீயில் கருகி நாசமானது. அதிகாலை 5.15 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாகவும் செந்தூலில் உள்ள கார பட்டறை, மின்சிகரெட் கடை, உணவகம் என 3 வணிகத் தலங்கள் தீயில் முற்றிலும் கருகியதாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரி Rusdi Ismail தெரிவித்தார்.

தீ வேகமாகப் பரவியதால் தீயணைப்பு அதிகாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதாகவும் சுமார் 20 தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தீவிபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Sebanyak 40 motosikal, sebuah kereta, dan tiga lot kedai di Sentul musnah dalam kebakaran awal pagi. Kebakaran melibatkan bengkel kereta, kedai vape, dan restoran. Tiada kemalangan jiwa dilaporkan dan kebakaran dikawal oleh 20 anggota bomba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *