சட்டம் சொல்வதைச் செயல்படுத்த தைரியம் வேண்டும்! தலைமை நீதிபதி Tengku Maimun

- Sangeetha K Loganathan
- 22 Jan, 2025
ஜனவரி 22,
ஒரு வளமான நாட்டிற்கு முதன்மையானது சட்டம். நீதியை நிலைநிறுத்துவதில் தலைமை நீதிபதியின் பொறுப்பு அதிகமானது என தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan Mat தெரிவித்தார். தலைமை நீதிபதியாக நாட்டையும் சமூகத்தையும் மக்கள் மதிப்பிடுவதற்கான அளவுகோலாகவும் செயல்படுவதில் தாம் தவறியதுமில்லை தவறவுமாட்டேன் என இன்று மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களுடனானச் சந்திப்பில் தெரிவித்தார்.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றி பேசுவது மிகவும் எளிதானது. ஆனால் அதனைச் செயல்படுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் சவால்கள் பல உள்ளது என்றாலும் நீதிபதியின் உயிர்மூச்சாகக் அவர்கள் கருதி சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுற்யுத்தினார்.
தீர்ப்பை வழங்கி அடுத்த வழக்கிற்கு நகர்வதை விடுத்து அதனைச் செயல்படுத்தும் முன்னெடுப்புகள் குறித்து சிந்திப்பதையும் அதைச் செயல்படுத்தவதற்கும் தைரியம் வேண்டும் என அவர் தெரிவித்தார். எத்தனையோ வழக்குகளில் தன்னுடைய சுய நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்து சட்டத்தின் அடிப்படையிலும் ஆதாரத்தின் அடிப்படையிலுமே மட்டும் தாம் தீர்ப்பு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
Tun Tengku Maimun Tuan Mat menekankan pentingnya keberanian dalam melaksanakan keadilan dan undang-undang untuk memastikan negara yang makmur. Beliau juga menyatakan komitmennya terhadap integriti undang-undang tanpa berat sebelah walaupun berdepan cabaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *