அபு தாபி மலேசிய தூதரகம் இன்று மூடல்
- Surendran Sumdraraj
- 02 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 2-
பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக அபு தாபியில் அமைந்துள்ள மலேசியாவின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இன்று பொதுமக்களுக்காக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த காலப்பகுதியில் நேரடியாக வழங்கப்படும் தூதரக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எனினும், அவசர ஆலோசனை மற்றும் உதவிகளுக்காக தூதரக குழுவை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளலாம்,” என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபு தாபியில் வசிக்கும் மலேசியர்கள் அமைதியாக இருந்து, தேவையான சமயங்களில் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



