பதவியிலிருந்த போது சொத்துகளைக் குவித்த அரசியல் தலைவர்கள்! மக்களுக்குத் திருப்பி கொடுப்பார்களா? அன்வார் கேள்வி!

top-news

பிப்ரவரி 16,

மக்களுக்கு உதவுவதாகக் கூக்குரலிடும் இப்போதைய அரசியல் தலைவர்கள், அவர்கள் பதவியில் இருந்த போது குவித்த சொத்துகளை மீண்டும் மக்களுக்கு வழங்க முன்வருவார்களா என பிரதமர் அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார். இப்போது ஹீரோக்கள் போல சத்தம் போடும் சில அரசியல் தலைவர்கள் அவர்கள் ஆட்சியில் இருந்த போது லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் வாங்கி குவித்த சொத்துகளைத் தங்கள் பிள்ளைகளின் பெயரில் வைத்து தப்பித்துக் கொள்வதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார். 

அரசியல் தலைவர்கள் நேர்மையாகச் சம்பாதிக்கும் சொத்துகளை அவர்கள் பெயரில் வைத்திருந்தால் சிக்கல் இருக்காது. ஆனால் மக்கள் பணத்தை திருடியும், நாட்டின் வளத்தைச் சுரண்டியும் சேர்த்த பணத்தைத் தங்கள் பிள்ளைகளின் உழைப்பால் சம்பாதித்து என கணக்குக் காட்டுவதைத் தாம் நம்பவில்லை என்றும், அவர்களில் யாரேனும் தன்னுடைய சொத்துகளிலிருந்து பாதியை மக்கள் பணிக்காகச் செலவிடுவார்களா எனும் கேள்வியையும் பிரதமர் அன்வார் முன்வைத்துள்ளார். 

இப்போது இருக்கும் சில அரசியல் தலைவர்களின் சொத்துகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருப்பதாகவும் ஓய்வு எனும் பெயரில் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் அந்த சொத்துகளை அனுபவித்து வருவதாகவும் இவர்களைப் போன்றவர்கள் மக்கள் நலனுக்காக அரசியலில் இருப்பது போல போலியான ஹீரோக்கள் போல வலம்வருவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Perdana Menteri Anwar Ibrahim mempersoalkan sama ada pemimpin politik yang mengumpul harta semasa berkuasa akan mengembalikannya kepada rakyat. Beliau menegaskan bahawa sesetengah pemimpin menyimpan kekayaan di luar negara atas nama anak-anak mereka dan berpura-pura menjadi pejuang rakyat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *