நெடுஞ்சாலை விபத்தில் மூவர் பலி! 6 பேர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 15 Jan, 2025
ஜனவரி 15,
இன்று அதிகாலை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் Pedas Linggi அருகே 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். அதிகாலை 5.50 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 73 வயது லாரி ஓட்டுநர் Mohd Esa Daharin, அவரின் உதவியாளராக Bangladesh ஆடவர், 44 வயது Md Usuf Ali எனும் உள்ளூர் ஆடவர், 21 வயது Terence Ng Zhi Yang எனும் பல்கலைக்கழக மாணவர் என மூவர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக Rembau மாவட்டக் காவல் ஆணையர் Shaik Abd Kadar Shaik Mohamed தெரிவித்தார்.
இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்திருக்கும் நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த லாரி நெடுஞ்சாலையின் தடுப்புச் சுவரை மோதி எதிர்திசையில் வந்த மற்ற 3 வாகனங்களை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tiga maut termasuk pemandu lori, pembantunya dan pelajar universiti dalam kemalangan empat kenderaan di Pedas Linggi pada awal pagi tadi. Enam lagi cedera. Lori dipercayai hilang kawalan dan melanggar pembahagi jalan sebelum merempuh tiga kenderaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *