நெடுஞ்சாலையில் லாரியும் பேருந்தும் விபத்து! 24 பேர் காயம்!

top-news

ஜனவரி 14,


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் சுங்கை பக்காப் அருகில் இன்று அதிகாலை 4.16 மணிக்கு TRELER லாரியின் பின்னால் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 24 பயணிகள் காயமடைந்தனர்.

விபத்தில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் 9 பேர் காயமடைந்து அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் சிராய்ப்பு காயங்களுக்குள்ளாகினர்.
 
சிரம்பானிலிருந்து சுங்கை பெட்டாணிக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Kemalangan bas persiaran dan treler di Kilometer 158.7 Lebuhraya Utara Selatan menyebabkan 24 penumpang cedera. Insiden berlaku jam 4.16 pagi serta melibatkan rombongan jemaah surau menuju ke Kedah. Mangsa dirawat di Hospital Sungai Bakap dan Hospital Seberang Jaya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *