விபத்தில் தாதியர் பலி! ஒருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 01 Jan, 2025
ஜனவரி 1,
கோலாசிலாங்கூர் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 57 வயது மருத்துவத் தாதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிள்ளானிலிருந்து கோலாசிலாங்கூருக்குச் செல்லும் சாலையில் இவ்விபத்து ஏற்பட்டதாக Kuala Selangor மாவட்டக் காவல் ஆணையர் Azaharudim Tajudin தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய 49 வயது வாகனமோட்டி படுகாயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்தொ ATIVA ரக வானகம் கால்வாயில் கவிழ்ந்ததால் வாகனமோட்டியான 49 வயது ஆடவரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதால் சிகிச்சைக்குப் பின்னர் அவரிடம் விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக Kuala Selangor மாவட்டக் காவல் ஆணையர் Azaharudim Tajudin தெரிவித்தார்.
Seorang jururawat berusia 57 tahun maut di tempat kejadian apabila motosikalnya dirempuh kereta yang hilang kawalan di jalan Kuala Selangor. Pemandu kereta berusia 49 tahun turut cedera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *