லாரி விபத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர் பலி! நால்வர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 8,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தங்சோங் மாலிம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த 3 டன் லாரி மற்றொரு லாரியையும் ஒரு வாகனத்தையும் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டுத் தொழிலாளர் உயிரிழந்தார். இன்று பிற்பகல் 1.27 மணிக்கு விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் 21 மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

3 டன் லாரி, ஒரு TRELER லாரி, ஒரு கார் என 3 வாகனங்கள் விபத்தில் சிக்கியதாகவும் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் TRELER லாரி ஓட்டுநரான 30 வயது Bangladesh ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்தாகவும் லாங்கூர் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang pekerja asing maut manakala empat lagi cedera dalam kemalangan melibatkan tiga kenderaan, termasuk sebuah lori 3 tan, treler dan kereta di Lebuhraya Utara-Selatan. Kejadian berlaku di Tanjong Malim dan disiasat oleh pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *