விபத்தில் பாகிஸ்தானிய ஆடவர் பலி!

top-news

டிசம்பர் 17,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் அருகில் உள்ள செம்பனை மரத்தை மோதி விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் உயிரிழந்தார். காலை 9.58 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு 10 மீட்புப் பணியாளர்களுடன் விரைந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

அதிவேகமாக வந்த Perodua Myvi ரக வாகனம் செம்பனை மரத்தை மோதியதால் வகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் வாகனத்தை இரண்டாக வெட்டி அவரின் உடலை மீட்டதாகவும் அவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் பலியான ஆடவர் 54 வயது பாகிஸ்தானைச் சேர்ந்த Abdul Hameed Abdul Majeed என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரேதப்பரிசோதனைக்காக அவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Seorang lelaki Pakistan, Abdul Hameed Abdul Majeed (54), maut apabila Perodua Myvi yang dipandunya melanggar pokok di Perak. Jabatan Bomba dan Penyelamat menyelamatkan mangsa menggunakan alat khas dan membawa mayatnya untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *