3 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம்!

top-news

நவம்பர் 25,

பேராக்கில் உள்ள Batang Padang சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம் அடைந்ததாக tapah மாவட்ட மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. Toyota Estima, Perodua Myvi, Proton saga என 3 வாகனங்களில் நால்வர் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அவர்களை மீட்டு தாப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 வயது பெண் ஓட்டிய Perodua Myvi வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த Estima, saga ரக வாகனங்களை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட நால்வரும் ஆபாத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. 

Kemalangan melibatkan Toyota Estima, Perodua Myvi, dan Proton Saga di Jalan Temoh-Kampar menyebabkan dua mangsa tersepit. Semua mangsa cedera dan dibawa ke Hospital Tapah untuk rawatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *