விபத்துக்குள்ளான டேன்கர் லாரி கடைக்குள் புகுந்தது! உயிர்தப்பிய முதாட்டியும் 4 குழந்தைகளும்!

- Sangeetha K Loganathan
- 16 Feb, 2025
பிப்ரவரி 16,
கட்டுப்பாட்டை இழந்த மைவி வாகனம் எதிர்திசையில் வந்த டேன்கர் லாரியை மோதியதால் டேன்கர் லாரி வாகனத்தை மோதி சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 5.20 மணிக்குக் கெடாவின் Tanjung Dawai சாலையில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் Yan, மாவட்டக் காவல் ஆணையர் Musa Rabien தெரிவித்தார்.
மைவி வாகனத்தில் இருந்த 70 வயது மூதாட்டியும் 11 வயதுக்குற்பட்ட 4 பேரக் குழந்தைகளும் வாகனத்திலேயே சிக்கியதாகவும் மீட்புப் படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடையின் சுவர்கள் மிகுந்த சேதத்திற்குள்ளானதாகவும் விபத்தின் போது சாலையோரக் கடையில் யாரும் இல்லாததால் பெரிதளவில் சேதம் ஏதுமில்லை என Yan, மாவட்டக் காவல் ஆணையர் Musa Rabien தெரிவித்தார்.
Sebuah lori treler terbabas ke dalam sebuah kedai selepas dirempuh oleh sebuah Perodua Myvi yang hilang kawalan di Tanjung Dawai, Kedah. Seorang wanita warga emas berusia 70 tahun dan empat kanak-kanak di dalam Myvi tersepit sebelum diselamatkan oleh pasukan bomba dan dikejarkan ke hospital. Kedai mengalami kerosakan teruk tetapi tiada pelanggan atau pekerja berada di dalam premis semasa kejadian
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *