விபத்தை ஏற்படுத்திய பாக்கிஸ்தானியர்கள் தப்பி ஓட்டம்!

top-news

ஜனவரி 7,

மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் சென்றதால் பொதுமக்களில் சிலர் வாகனத்தைத் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்பவம் தொடர்பாகக் காவல் துறையில் 25 வயது ஆடவர் புகார் அளித்துள்ளதாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். 

ஜொகூரில் உள்ள Tun Fatimah, Kangkar Tebrau சாலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் கட்டுப்பாடில்லாத வாகனம் இரு மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற போது பொதுமக்கள் வாகனத்தைத் தாக்கியதாகவும் வாகனத்தைச் செலுத்தியது சம்மந்தப்பட்ட பகுதியில் வசித்து வந்த இரு பாக்கிஸ்தானிய ஆடவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட இரு பாக்கிஸ்தானிய ஆடவர்களையும் தேடி வருவதாகவும், விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். 

Lelaki warga Pakistan melarikan diri selepas kemalangan di Jalan Tun Fatimah, Kangkar Tebrau, melibatkan Proton Wira dan dua motosikal. Seorang penunggang motosikal dirawat di HSA. Kemalangan berpunca daripada kecuaian pemandu kereta. Siasatan diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *