1MDB நிதி மீட்பு: ஜோ லோ குடும்பம் மற்றும் தாரெக் ஒபைதிடமிருந்து பெரும் தொகை திரும்பப் பெறப்படும் என எதிர்பார்ப்பு
- Tamil Malar (Reporter)
- 09 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 9-
மலேசிய அரசு, 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) நிறுவனத்தின் திருடப்பட்ட நிதியை பல தனிநபர்களிடமிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் பெட்ரோசவுதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாரெக் ஒபைத் , தலைமறைவில் உள்ள தொழிலதிபர் லோ தேக் ஜோ (ஜோ லோ)வின் குடும்ப உறுப்பினர்கள் முக்கியமானவர்கள்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தற்போது தாரெக் ஒபைதிடமிருந்து சுமார் 600 மில்லியன் ரிங்கிட் தொகையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது 1MDB நிதி மோசடியுடன் தொடர்புடையது.
மேலும், ஜோ லோவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான கணக்குகளில் உள்ள நிதி, சொத்துக்கள் விரைவில் மலேசிய அரசுக்கு திரும்ப ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிகள் ஏற்கனவே SPRMயின் கண்காணிப்பில் உள்ளன.
இதன்மூலம், மொத்தம் 5 பில்லியன் ரிங்கிட் வரையிலான நிதி மலேசியாவுக்குத் திரும்பக் கிடைக்கும் என SPRM எதிர்பார்க்கிறது. 1MDB ஊழல் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சுவிஸ் நீதிமன்றம் தாரெக் ஒபைதை குற்றவாளியாக அறிவித்துள்ள நிலையில், இந்த முயற்சிகள் மேலும் வலுவடைந்துள்ளன.
இந்த நிதி மீட்பு, மலேசிய மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. அரசு தொடர்ந்து அனைத்துலக ஒத்துழைப்புடன் இதனைத் துரிதப்படுத்தி வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



