லாரியை நேரெதிரில் மோதிய கார்! இளைஞர் பலி!

top-news

மார்ச் 1,

செப்பாங்கிலிருந்து நீலாய் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் வந்த லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 26 வயது வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை 6.55 மணிக்கு விபத்து குறித்தானத் தகவல் கிடைத்ததாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் ABDUL MALIK HASIM தெரிவித்தார்.

செப்பாங்கிலிருந்து நீலாய்க்குச் செல்லும் சாலையில் 26 வயது இளைஞர் செலுத்திய PROTON ALZA வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 45 வயது ஆடவரின் லாரியை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த 26 வயது வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் ABDUL MALIK HASIM உறுதிப்படுத்தினார்.

Sebuah Proton Alza hilang kawalan dan bertembung dengan lori di jalan dari Sepang ke Nilai menyebabkan pemandunya seorang lelaki berusia 26 tahun maut di tempat kejadian. Polis menerima laporan kemalangan pada jam 6.55 pagi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *