ஒற்றுமை அரசில் கூட்டணி ஒத்துழைப்பே வலிமை – சௌ கோன் யோ வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 30 Mar, 2026
புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 30-
ஒற்றுமை அரசின் கீழ் செயல்படும் பாக்காத்தான் ஹரப்பான் (PH) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான நெருங்கிய ஒத்துழைப்பே அரசியல் நிலைத்தன்மையும் வலிமையும் உறுதிப்படுத்தும் முக்கிய காரணமாகும் என்று பினாங்கு மாநில பாக்காத்தான் ஹரப்பான் தலைமை கவுன்சில் தலைவர் சௌ கோன் யோ தெரிவித்துள்ளார்.
‘ஒன்றிணைந்தால் வலிமை’ என்ற கொள்கைக்கு இணங்க இந்த அணுகுமுறை அமல்படுத்தப்படுவதாகவும், இது எதிர்வரும் பொதுத் தேர்தல் (PRU) மற்றும் மாநிலத் தேர்தல் (PRN) ஆகியவற்றை முன்னிட்டு கூட்டணியின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் ஒற்றுமை அரசின் கீழ் நடைமுறையில் இருக்கும் இந்த ஒத்துழைப்பு முறை, தேர்தல்களை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இந்த அணுகுமுறை தேசிய மட்டத்திலும் செயல்படக்கூடியது. வேறு எந்த வடிவமைப்பும் வாக்குகள் பிளவுபடுவதற்கு வழிவகுக்கும். இதனால் வெற்றி வாய்ப்புகள் குறைந்து, எதிர்க்கட்சிகளுக்கு ஆதாயம் கிடைக்கும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



