கிள்ளானில் இளைஞர் படுகொலை! 5 மியான்மார் நாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 04 Dec, 2024
டிசம்பர் 4,
கிள்ளானில் உள்ள வணிகத்தளத்தின் பின்னால் 16 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளிகளான 5 மியன்மார் நாட்டினரைக் காவல் துறை கைது செய்துள்ளதாக வடக் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S. Vijaya Rao தெரிவித்தார்.
கடந்த ஞாயிறு நள்ளிரவு 12.30 மணியளவில் Taman Klang Utama பகுதியில் உள்ள வணிகத் தளத்தின் பின்னால் 16 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரினுடலில் 20 மேற்பட்ட கத்திக் குத்துகளுக்கான அடையாளங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் தொடர் விசாரணையில் 25 முதல் 40 வயதுள்ள 5 மியான்மார் நாட்டினரைக் கைது செய்து விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் இது கூட்டுக் கொலை என கண்டுப்பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Polis menahan lima lelaki Myanmar dipercayai membunuh seorang remaja berusia 16 tahun di Klang akibat cemburu. Mangsa ditikam lebih 20 kali. Semua suspek direman tujuh hari, dan polis merampas telefon bimbit milik semua suspek dan usaha giat dilakukan bagi mengesan senjata yang digunakan dalam kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *