கிளந்தான் சுல்தானிடம் அக்மால் மன்னிப்புக் கேட்க வேண்டும்! - பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Ezzat Hanuzi வலியுறுத்து

- Shan Siva
- 30 Dec, 2024
கோலாலம்பூர், டிச 30: 2018 இல் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பைக் கேள்விக்குட்படுத்தியதற்காக கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகமதுவிடம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
2016 முதல் 2019 வரை மன்னராக இருந்த சுல்தானிடம், மன்னிப்பு செயல்முறை சட்ட நடைமுறைகளுக்கு
இணங்கியது குறித்து கேள்வி எழுப்பியதற்காக அக்மால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கிளந்தான்
பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Ezzat Hanuzi தெரிவித்துள்ளார்.
ஓர் அரசியல்வாதியாக,
அக்மால் அதிக பொறுப்புடன் (பொது அறிக்கைகளை
வெளியிடுவதில்) மற்றும் மலேசிய சட்ட அமைப்பில் மக்களின் நம்பிக்கையை வளர்க்க
வேண்டும். கானால், அந்த நம்பிக்கையைக்
கெடுக்கக் கூடாது என்று எசாட் கூறினார்.
கட்சிகளுக்கு
இடையே நல்லுறவைப் பேண, ஒற்றுமை அரசாங்கத்தில்
உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக மரியாதையையும் தோழமையையும் காட்ட வேண்டும்
என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *