ரஷ்யாவை நடுநடுங்க வைத்த உக்ரைன்!

- Muthu Kumar
- 03 Jun, 2025
வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இணையாக ராணுவ பலத்தை வைத்திருப்பதாகவும், ரஷ்யா மீது உலக நாடுகள் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த நிலையில், உக்ரைன் என்ற ஒரு சின்ன நாடு ரஷ்யாவின் உள்ளே சுமார் 4000 கிலோமீட்டர் உள்ளே புகுந்து அதன் போர் விமானங்களை அழித்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா கோடிக்கணக்கில் செலவு செய்து ஆயுதங்களை செய்து வைத்திருக்கும் நிலையில், வெறும் 450 டாலர் மதிப்பில் செய்யப்பட்ட ட்ரோன்கள் மூலமே உக்ரைன் ரஷ்யாவை சரமாரியாக தாக்கியுள்ளது என்றும், இந்த தாக்குதலால் உண்மையில் ரஷ்யா நடுநடுங்கி போனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதாகவும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் ராணுவ மரியாதை உலக நாடுகள் மத்தியில் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாகவும், இதிலிருந்து மீண்டு வர ரஷ்யா என்ன செய்ய வேண்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.என்னதான் உக்ரைன் மீது பதில் தாக்குதலை இனி ரஷ்யா நடத்தினாலும், ரஷ்யாவின் சேதம் என்பது அந்நாட்டிற்கு மிகப்பெரிய கரும்புள்ளியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி, அமெரிக்காவின் துணை இல்லாமல் சொந்த நாட்டின் டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமே தான் உக்ரைன் தாக்கி வருவதாகவும், இதனால் இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது என்றால் பாகிஸ்தான் விஷயத்தில், இந்தியா எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதரவு பாகிஸ்தானுக்கு இருக்கும் நிலையில், இந்தியா மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *