கொள்ளை கும்பலைச் சேர்ந்த கணவன் மனைவி உட்பட நால்வர் கைது!

- Sangeetha K Loganathan
- 15 Feb, 2025
பிப்ரவரி 15,
வீட்டில் புகுந்து கொள்ளை அடிக்கும் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் கணவன் மனைவி இருவரும் அடங்கியதாகவும் Arau மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsein Md Rodi தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் 13 திருட்டுச் சம்பவங்களை இக்கும்பல் செய்துள்ளதாகவும் ஆராவ் பகுதியில் தேடப்படும் கும்பலாக இவர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் 23 முதல் 28 வயதுக்குற்பட்டவர்கள் என்பதையும் அவர் தெரிவித்தார். அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் syabu வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்திருப்பதாக Arau மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsein Md Rodi தெரிவித்தார்.
Polis Arau menahan empat individu termasuk pasangan suami isteri yang disyaki terlibat dalam 13 kes pecah rumah. Barangan curi dirampas dan siasatan mendapati suspek menggunakan dadah jenis syabu. Kesemua mereka berusia antara 23 hingga 28 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *